மலையாள தேசத்து மறக்கமுடியா
நாட்களில்
இன்னும் பல உண்டு
எழுத்தில் வடிக்க
போன புதிசில் ரேஷன்
ஆபீஸ் தேட
இடம் அறியாமல் வரும்
பெண்ணைக் கேட்க
சரியாவே சொன்னாள்
இருக்குமிடம் போக
சமயம் கழிந்து என்
பணி முடித்து
திரும்பி வரவே ஒரு
செக்கனை நோக்கி
காஃபி ஹௌஸ்
எவ்விட நானும் கேட்க
அவன்சொன்ன
திசையில் அப்பாவியாய் நடக்க
காஃபி ஹௌஸ்
வராமல் நகர எல்லை வர
எதிர் திசையில்
வந்த இனிமைப் பெண்ணிடம்
சரியான இடம் எதிரே
என்று அறிந்து
சமமாய் அவளுடன் பின்னவும்
நடக்க
தெரிந்துகொண்டேன்
டெலிபோன் பணியை
குரலின் இனிமையால்
கவரப் பட்டு
விட மனமில்லாமல் காஃபி
ஹௌஸ் சென்றேன்
அன்றுதோன்றியது மனதில்
என்னவோ
ஆழமாகவே எண்ணத்தில்
பதிய
இடம்வழி கேட்க என்றும்
நானும்
பெண்டிர்களையே தெரிந்து
எடுத்தேன்
காடு மேடு தெரு பலவாய்ச்
சுற்றியும்
கண்டுகொண்டேன் உத்தியின்
பலத்தை
எண்ணி வியந்தேன் மங்கையர்
அறிவை
என்றும் பாராட்டினேன்
அவர்கள் துணிவை
மூன்று வருடம் மேகமாய்க்
கழிந்து
முழுப்பணி
முடியவும் மாற்றல் ஆர்டர் வரவும்
அறிந்து கொண்டேன்
அடுத்துப் போவது
தமிழ்நாட்டிலுள்ள
குக்கிராமம் என்று
இவ்விடம் கழித்த இனிமைப்
பொழுதுகள்
அலை அலையாய் மனத்தில்
புயலாய்
ஆர்டர் கேன்சல்
பண்ண நானும் முயன்று
முடியாதெனத்
தெரிந்து மனமும் நொந்தேன்
பாதி எரிச்சல் பாதி
அதிருப்தியுடன்
குக்கிராம
வீதியில் வங்கி தேடி அலைய
சுமாரான அழகில் தேவதை
வந்தாள்
அறியாமல் அவளிடம்
வங்கி இடம் கேட்க
ஏண்டா உனக்கு வங்கி
வழி சொல்ல
என் பொண்டாட்டிதான்
கிடைத்தாளா என்று
டீக்
கடையிலிருந்த தமிழ்த் திருமகன்
தாறுமாறாய்த் திட்டிக்
கொண்டிருந்தான்.
KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU