Thursday, 30 August 2012

30. லவ் மேரேஜ்


தெருவெல்லாம் மழைபெய்து தண்ணீர்
தாரைதாரையாய் அவள்முகத்தில் கண்ணீர்
கணவன் பிரிந்த சோகத்தில் அவளும்
கடன்வசூல் செய்யும் வேகத்தில் நானும்

கேரள கிராமத்து தனி வீட்டில் ஒருநாள்
கேட்டுக்கிட்டிருந்தேன் அவளின் கதையை
பெண்ணின் இளமை இருபத்து ஐந்தாம்
பெற்ற பிள்ளைகளும் அடுத்தடுத்து ஐந்தாம்

அவள் புருஷன் வழிமுறையாய் பெற்ற
அம்பது சென்ட் குன்றின் நிலத்தில்
ரப்பர்தோட்டம் வைக்க வாங்கிய கடனை
வசூலிக்கும்பொருட்டு நானங்கு சென்றேன்

அலைந்தலைந்து அட்ரஸைத் தேடி
அக்குடிலில் அடி எடுத்து வைத்தேன்
பார்த்தவுடன் அசல் வட்டி சொன்னேன்
கேட்டவுடன் பீரிட்டு அழுதாள்

பரிதாபத்தில் மனமிரங்கி நின்று
வரலாற்றை அவள் படிக்கக் கேட்டேன்
விவாஹம் லவ் மேரேஜ் என்றாள்
சொந்தபந்தம் யாருமில்லை சொன்னாள்

ஆரம்ப காலம் நன்றாய்ப் போக
அடுத்தடுத்து பெண்களாய்ப் பிறக்க
மோகம் கொஞ்சங் கொஞ்சமாய் குறைய
கஷ்டங்கள் அடுக்கடுக்காய் நிறைய

லாரி ஓட்டி லவ் பண்ணிய கணவன்
சொல்லாமல் ஒருநாள் மேரியோடு ஓட
இவள்மட்டும் குழைந்தைகள் லோடுடன்
ஆக்ஸிடெண்ட் லாரியாய் அங்கே கிடக்க

என்று வருவான் ஆசை கணவன்
ஏங்கி ஏங்கி தவியாய் தவிக்க
நானங்கு கடன் கேட்டு சென்றதும்
அவள் சோகம் பன்மடங்காய் பெருக

காற்றுகாற்றாய் தினந்தோறும் அடித்து
மழைமழையாய் இரவெல்லாம் கொட்டும்
காட்டில் இருந்த அக் குச்சு வீட்டில்
குழைந்தைகளுடன் அவள்படும் பாட்டை

நினைத்துப் பார்த்தேன் நெஞ்சில் ஈரமாய்
வங்கிக் கடன் வட்டி வசூல் மறந்தேன்
கண்டிப்பாய் உன் கணவர் வருவார்
காத்திரு நம்பிக்கையுடன் சொன்னேன்


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

Sunday, 26 August 2012

29. மானந்தவாடி


மானந்தவாடி ஓர் அற்புத நகரம்
மக்கள் வாழ நல்ல ஒரு ஸ்தலம்
சீதோஷ்ண நிலை சிறப்பாக இருக்கும்
சிலப்போ ஒரு ஊட்டி போல் தோணும்

சூரியனைச் சதா மேகங்கள் சூழ்ந்து
சுற்றுப் புறங்களை சில்லென வைக்கும்
நறுமணம் கமழ மலர்கள் மலர்ந்து
நாலாபுறமும் தென்றலாய் வீசும்

வீட்டைவிட்டு வெளியில் நடந்தால்
உடம்பு பூரா குளிர்ச்சி உண்டாகும்
வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தால்
மனம் முழுக்க மகிழ்ச்சி உண்டாகும்

பனிபெய்யும் பகுதிகளில் எல்லாம்
பட்டுபோல் உள்ள இலைகளின்மீது
சிறுசிறு திவலைகள் ஒன்றாய்ச்சேர்ந்து
சொட்டுசொட்டாய் கொட்டிக்கொண்டிருக்கும்

காப்பிதோட்டத்தைச் சேர்ந்து பார்த்தால்
தும்பைப்பூ போல வெள்ளைப் போர்வையை
தோட்டம் முழுக்க போர்த்தியது போல்
வெள்ளைக்கூடாரம் மனத்தில் தோன்றும்

மழைபெய்யும் கார்கால நாட்களில்
மண்ணும் விண்ணும் மழைக்கோடு இழுக்கும்
மண்ணெல்லாம் செம்மண் ஆதலால்
நீரோடு சேர்ந்து குயமண் ஆகும்

எப்பொழுதும் கையிலொரு குடையுடன்
இல்லையென்றால் மழைக்கால கோட்டுடன்
சின்னஞ்சிறார் முதல் பெரியோர்கள் வரை
நடந்துசெல்லும் காட்சி கண்கொள்ளா காட்சி

விதவிதமாய்ப் பூத்த மலர்களின் நடுவே
நங்கையர் பலர் பஸ்ஸுக்கு நின்றால்
மலர்களுக்குப் போட்டி மங்கையரா என்றும்
மணிக்கணக்காய் டிபேட் செய்யத்தோன்றும்

இளவேனிற்காலத்தில் வள்ளியூர்காவு
தெய்வதரிசனம் செய்து திரும்பிவந்தால்
இளம்வெய்யிலில் மெய்யெல்லாம் காணும்
கலை நயத்துடன் மானந்தவாடி தோற்றம்

வெயில் காலத்தில் இருக்கவே இருக்கு
நகரருகில் ஓடும் சுத்தமான ஆறு
ஆடவர் பெண்டிர் அங்கே குளிக்கும் காட்சி
எக்காலத்தையும் ஒரே நிலையாய் ஆக்கும்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU