Wednesday, 11 July 2012

14. ஓகே. செய்தேன்


நானிருந்த நகரின் அருகில்
பட்டிக்கல் என்ற ஊரில்
அணி அணியாய் லோனைக்கொடுத்து
அனைவருமே டிபால்டர் ஆயி

தாங்கமுடியா தலைவலிதன்னை
தினந்தோறும் அக்ரிக்கு கூட்டி
கிளை, டிவிசன், சர்க்கிள் எல்லாம்
“நோ மோர் லெண்டிங்” எனப் பறைய

அந்தப்பகுதி பிரஜை ஒருவர்
எடக்கெடுக்க லோனும் கேட்டு
நச்சரிக்க ஆரம்பித்ததாலே
“விசிட்” வர ஒப்புக்கொண்டு

ஸ்டார்ட்செய்தேன் மோட்டார் சைக்கிளை
பில்லியன் ரைடராய் இருத்திக்கொண்டு
மனசுக்குள் திட்டம் போட்டேன்
தோட்டம் பார்த்து இல்லை எனக் கூற

போகும்போதே அவரிடம் சொன்னேன்
“பட்டிக்கல்”எனில் கிடைக்காதென்று
திரும்பதிரும்ப அவரும் சொன்னார்
பார்த்துவிட்டே கொடுங்கள் என்று

மணிநேரப் பயணம் கழித்து
சென்றடைந்தோம் அவரது இல்லம்
அவர் இறங்கி கதவைத் தட்ட
கன்னி ஒருத்தி கதவைத்திறக்க

நபருக்கோ நாற்பது வயது
நங்கைக்கோ இருபது இருக்கும்
பார்த்ததும் தெரிந்துகொண்டேன்
மலையாள சுந்தரி என்று

தோட்டம் காணப் புறப்படுமுன்னே
“டாக்குமெண்ட்ஸ்” நானும் கேட்க
தரவாட்டில் இருக்குதென்று
எடுத்துவர அவரும் போக

சிறிது நேர அவகாசத்தில்
சுந்தரியை லுக்கும் விட்டேன்
முண்டில்தெரிந்த “மவுண்டை”நானும்
முறைத்துமுறைத்துப் பார்த்துக்களித்தேன்

நாணிக்கோணி அவளும் வெட்க
“தோட்டம் போவோம்” சத்தம் கேட்க
வேண்டாமெனக் கூறி நானும்...........
லோனைத்தான் ஓகே. செய்தேன்.


KAVIGNAR MILLENIUM VIGNESHIN THAMIZH KAVITHAIKAL NOORU

1 comment: